திருப்போரூர், : திருப்போரூர், கந்தசுவாமி கோவிலில், மாசி பிரம்மோற்சவ பெருவிழா, கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
கந்தசுவாமி புருஷாமிருகம், ஆட்டுக்கிடா உள்ளிட்ட வாகனங்களில், காலை, இரவு உற்சவங்களாக வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பிரதான விழாவான தேர் திருவிழா, நாளை, நடைபெறுகிறது.விழாவையொட்டி, நிழற்கூரையுடன் மூடி வைக்கப்பட்டிருந்த, தேரின் பக்கவாட்டு தகடுகள் அகற்றப்பட்டு, தூய்மைபடுத்தல், வண்ணம் அடித்தல் போன்ற பணிகள் நடந்து வருகின்றன.பக்தர்கள் வடம் பிடித்து இலகுவாக இழுத்து செல்லும் வசதிக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.திருப்போரூர் கந்த சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் முக்கிய விழாவாக மாசி பிரம்மோற்சவ பெருவிழா நடைபெறுகிறது.நாளை நடைபெறும் தேர் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க உள்ளனர்.தேர் திருவிழா நாளில், உள்ளூர் விடுமுறை விட்டால், பக்தர்கள் பெரிதும் மகிழ்ச்சியடைவர் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE