திட்டக்குடி : ஆவினங்குடி அருகே இடப்பிரச்சினை தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் புகாரின் பேரில் போலீசார் ஆறு பேர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
திட்டக்குடி அடுத்த நாவலுார் கிராமத்தைச் சேர்ந்த திருமுருகன் மற்றும் பாண்டியனுக்கும் இடையே இடப்பிரச்சினை குறித்து முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் 19ம் தேதி மாலை திருமுருகனின் மனைவி சாந்திக்கும், பாண்டியனுக்கும் வாய்தகராறு ஏற்பட்டது. இதில் சாந்தியை பாண்டியன் தாக்கியதாக கூறி, திருமுருகன் மற்றும் சிலர் பாண்டியனை ஆபாசமாக திட்டி, கட்டையால் தாக்கினர். இருதரப்பு புகார்களின் பேரில் ஆவினங்குடி போலீசார் ஆறு பேர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE