காஞ்சிபுரம் : உத்திரமேரூர் போலீஸ் நிலைய உதவி ஆய்வாளர் ஒருவர், தன்னை மிரட்டி, நான்கு பத்திரங்களில், கையெழுத்து வாங்கிவிட்டதாக, ரங்கநாதன் என்பவர், கலெக்டரிடம் மனு அளித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் தாலுகாவில் உள்ள ஆணைப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கநாதன், 35. இவர், உத்திரமேரூர் போலீஸ் நிலைய உதவி ஆய்வாளர், தன்னை மிரட்டி, நான்கு பத்திரங்களில் கையெழுத்து வாங்கியதாக, கலெக்டரிடம் புகார் அளித்துள்ளார். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என, புகார் தெரிவித்துள்ளார். இது குறித்து கலெக்டரிடம் அவர் அளித்த புகார் மனு:எனது உறவினருக்கு பத்தாண்டுகளுக்கு முன், என் தாயார், 68 ஆயிரம் ரூபாய் கடனாக வழங்கியிருந்தார்.
அந்த பணத்தை நாங்கள் திரும்பி கேட்டு வந்தோம். வாங்கிய கடன் தொகையை, என் உறவினரின் மகள், 2017ல் திருப்பி கொடுத்தார்.திருப்பி கொடுக்கப்பட்ட கடனுக்கு, மீண்டும் அவர்களுக்கு பத்திரம் எழுதி தர வேண்டும் என, கடந்தாண்டு மார்ச் மாதம் உத்திரமேரூர் போலீசார் அழைத்து சென்று கட்டாயப்படுத்தினர்.கடனை திருப்பி கொடுத்த உறவினரிடமே, நான் கடனாக பணம் பெற்றது போல, பத்திரம் எழுதி கொடுக்க உதவி ஆய்வாளர் மிரட்டினார்.
போலீசின் மிரட்டல் காரணமாக, நான்கு பத்திரங்களில் நான் கையெழுத்திட்டு கொடுத்தேன். இது சம்பந்தமாக, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு எஸ்.பி.,க்களிடம் புகார் மனு அளித்தேன். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE