மந்தாரக்குப்பம், : திடீர் மழையால் தார் பாயிக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.
கடலுார் மாவட்டத்தில் வடலுார், குறிஞ்சிப்பாடி, புவனகிரி, சிதம்பரம், விருத்தாசலம் பகுதிகளில் சம்பா அறுவடை நடந்து வருகிறது. அறுவடை செய்த நெல்லை விவசாயிகள் மூட்டையில் கட்டி அடுக்கி வைத்துள்ளனர். இந்நிலையில் நேற்று பெய்த கன மழையால் நெல் மூட்டைகள் நனைந்து சேதமானது.திடீர் மழைக்கு நெல் மூட்டைகள் நனைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர். அதை தொடர்ந்து நெல் மூட்டைகளை பாதுகாக்க தார்பாய்களை வாங்கி வந்து, நெல் மூட்டைகள் மீது விரித்து பாதுகாத்து வருகின்றனர்.இதனால், தற்போது தார்பாய்க்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.
மந்தாரக்குப்பம் கடை வீதியில் உள்ள கடையில் விவசாயிகள் தங்களுக்கு தேவையான அளவுகளில் தார்பாய்களை வாங்கி செல்கின்றனர். கிடங்குகள், குடிசை வீடுகள், செங்கல் சூழைகள், சரக்கு லாரிகள், டெம்போவிற்கு தேவையான தார்பாய்களையும் வாங்கி செல்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE