ஆலந்துார் : கத்திபாராவில், மொபைல் போன் கடையின், ஷட்டர் பூட்டை உடைத்து, 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மொபைல் போன்கள், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவை திருடு போயின.
ஆலந்துாரைச் சேர்ந்தவர் ஜெய்லாப்புதீன், 40; கத்திபாரா பகுதியில், மொபைல் போன் விற்பனை கடை நடத்தி வருகிறார்.நேற்று காலை, கடை திறக்க வந்தபோது, ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு, அதிர்ச்சி அடைந்தார்.உள்ளே சென்று பார்த்தபோது, 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மொபைல் போன்கள், கல்லா பெட்டியில் இருந்த, 25 ஆயிரம் ரூபாய் ஆகியவை திருடுபோனது தெரிந்தது.கடையில் இருந்த, கண்காணிப்பு கேமரா ஒயர்கள் அறுக்கப் பட்டிருந்தன. பரங்கிமலை போலீசார், வழக்கு பதிந்து, கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்வையிட்டனர். அதில், முக கவசம் அணிந்த இரு நபர்கள், கடையில் புகுந்து திருடியதும், பின், கேமரா ஒயர்களை அறுப்பதும் பதிவானது. குற்றவாளிகள் குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE