உடுமலை:'புன்னகையை தேடி 2021' மூலம், 31 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர்.திருப்பூர் மாவட்ட, மாநகர போலீசார், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சைல்டு லைன், தொழிலாளர் நலத்துறை ஆகியோர் இணைந்து, 'புன்னகையை தேடி 2021' திட்டம் மூலமாக மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்டனர்.இக்குழுக்கள் வாயிலாக, திருப்பூர் நகரில், - 12, மாவட்டத்தில் - 19 என, 31 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மாநகர தனிப்படை போலீசாரால், 20 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.இதுவரை, மாநகரில், 86 சிறுவர், சிறுமியர் காணாமல் போனதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த, ஏழு மாதங்களில், 75 குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டு, திருப்பூர் மாவட்ட குழந்தைகள் நல குழு வாயிலாக, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE