உடுமலை:உடுமலையில், சேவை நிறுவனம் சார்பில், வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிக்கும், குடும்பத்தினருக்கு, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.கோவை என்.எம்.சி.டி., சேவை நிறுவனம் சார்பில், உடுமலை பகுதியில், வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிக்கும், குடும்பத்தினருக்கு, மளிகை பொருட்கள், மருத்துவ உதவி மற்றும் அவசர கால நிதி உதவி வழங்கப்பட்டது.திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வதேவன் வரவேற்றார். டாக்டர் சவுந்தர்ராஜன், ஆசிரியர் பால்ராஜ் உட்பட பலர், நலத்திட்ட உதவிகளை, மக்களுக்கு வழங்கினர். நிகழ்ச்சியில், சேவை நிறுவன நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஒருங்கிணைப்பாளர் கவுதம் நன்றி தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE