வால்பாறை:வால்பாறையில் இரு நாட்களாக மழை பெய்வதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.வால்பாறையில் கடந்த நான்கு மாதங்களாக வெயில் நிலவுகிறது. மழைப்பொழிவு முற்றிலுமாக குறைந்துள்ளதால், அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகள் அனைத்தும் வறட்சியாக காணப்படுகிறது.இந்நிலையில், வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் நேற்று முன் தினம் மாலை, கனமழை பெய்தது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையால், ஓடைகளில் மழை நீர் பெருக்கெடுத்தது.நீண்ட இடைவெளிக்கு பின், மழை பெய்வதால், உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதிகபட்சமாக வால்பாறை நகரில், 19 மி.மீ., மழையளவு பதிவானது.இதேபோன்று, பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு மழை பெய்ததால், வெயிலின் தாக்கம் குறைந்தது. இரவில், குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE