ஆர்.கே.பேட்டை : -எல்லம்மன் கோவில், ஏழாம் ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி, புதிய உற்சவர் சிலைக்கு, நேற்று, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
ஆர்.கே.பேட்டை அடுத்த, வங்கனுாரில் எல்லம்மன் கோவில் உள்ளது. கும்பாபிஷேகம் நடத்தி, ஏழு ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில், நேற்று, புதிய உற்சவர் சிலைக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.இதற்கான, யாகசாலை பூஜை, கடந்த வெள்ளிக்கிழமை துவங்கியது. நேற்று, காலை, 7:30 மணிக்கு, உற்சவர் அம்மன் சிலைக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.அதை தொடர்ந்து, 8:30 மணிக்கு, செவிண்டியம்மன் கோவில் வளாகத்தில் இருந்து, பக்தர்கள் பால்குடங்களை, ஊர்வலமாக சுமந்து சென்று, அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். மாலை, 6:30 மணிக்கு, உற்சவர் அம்மன் வீதியுலா எழுந்தருளினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE