திருத்தணி : திருத்தணி நகராட்சியில், நான்கு கோடி ரூபாய் மதிப்பில், தார்ச்சாலை அமைக்கப்பட உள்ளது.
திருத்தணி நகராட்சியில், பாலாஜி நகர், சப்தகிரி நகர், சாய்பாபா நகர், கே.கே.நகர், ஆதிசங்கரர் அவென்யூ, வெற்றிவேல் நகர், சக்தி நகர், பாப்பிரெட்டிப்பள்ளி சாலை, ஜெ.ஜெ.ரவி நகர், ராஜீவ்காந்தி நகர் மற்றும் மகா விஷ்ணு ஆகிய பகுதிகளில், அமைக்கப்பட்ட தார்ச்சாலைகள் சேதம் அடைந்துள்ளன.இந்த சாலைகளை சீரமைக்க தீர்மானித்து, நகராட்சி நிர்வாகம் சார்பில், நான்கு கோடி ரூபாய் நிதியில் தார்ச்சாலைகள் அமைக்கப்பட உள்ளன. இப்பணிகளுக்காக வரும், 25ம் தேதி ஒப்பந்ததாரர்களிடம் விருப்ப மனு பெறப்பட்டு, அன்று மாலையே, டெண்டர் விடப்படும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE