ஆனைமலை:பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதி விவசாயிகள், இளநீர் விற்பனை விலையை ஒரு ரூபாய் உயர்த்தியுள்ளனர்.தமிழகம் முழுவதிலும் கடும் வெயில் நிலவுவதால், இளநீருக்கு தேவை மிகவும் அதிகரித்துள்ளது. வரத்து குறைந்து வரும் நிலையில், தேவை அதிகரிப்பால் தொடர்ந்து விலை உயர்ந்து வருகிறது. தற்போது, பொள்ளாச்சி, ஆனைமலை, உடுமலை தாலுகா பகுதிகளில் இருந்து, நாடு முழுவதிலும் இளநீர் விற்பனைக்காக அனுப்பப்பட்டு வருகிறது.கடந்த வாரத்தை போல இந்த வாரமும், ஒரு ரூபாய் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. நாளை (இன்று), 22ம் தேதி முதல், வீரிய ஒட்டு ரக இளநீர் ஒன்று, பண்ணையில் வியாபாரிகளுக்கு, 23 ரூபாய்க்கு விற்பனை செய்ய விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எடைக்கு வழங்கினால், ஒரு டன் இளநீர், 8,500 ரூபாய்க்கு விற்பனை செய்யலாம். விவசாயிகள் குறைந்த விலைக்கு விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும்.இத்தகவலை, ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE