பொள்ளாச்சி, உடுமலை கல்வி மாவட்டத்தில் நடந்த தேசிய திறனாய்வு தேர்வை, 1,497 பேர் எழுதினர்.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, அரசின் சார்பில் ஆண்டு தோறும் தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வில் வெற்றி பெரும் மாணவிகளுக்கு, பிளஸ் 2 வகுப்பு வரை மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில், தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி தொகை திட்ட தேர்வு நேற்று நடந்தது. அதில், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பொள்ளாச்சி நேதாஜி ரோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆனைமலை வி.ஆர்.டி., பள்ளி உள்ளிட்ட, எட்டு மையங்களில் நேற்று தேர்வு நடந்தது.காலை, 9:30 முதல், 11:00 மணி வரை மனத்திறன் தேர்வும், காலை, 11:30 மணி முதல் மதியம், 1:00 மணி வரை படிப்பறிவுத்தேர்வும் நடந்தது. தேர்வுக்கு விண்ணப்பித்த, 1,015 பேரில், 920 பேர் தேர்வு எழுதினர். 95 பேர் தேர்வு எழுதவில்லை. கல்வித்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.வால்பாறைவால்பாறை நகரில் உள்ள இரண்டு தேர்வு மையங்களில், 160 மாணவர்கள் தேர்வு எழுதினர். அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சிவன்ராஜ் கூறுகையில், ''தேசிய திறனாய்வு தேர்வில் இரண்டு தேர்வு மையங்களில், 189 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில், 39 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. தேர்வு எழுத வந்த மாணவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது. அனைத்து மாணவ, மாணவிகளும் சமூக இடைவெளிவிட்டு, முக்கவசம் அணிந்து தேர்வு எழுதினர்,' என்றார்.உடுமலைஉடுமலை கல்வி மாவட்டத்தில், உடுமலை ஆண்கள் மற்றும் பெண்கள் அரசுப்பள்ளி, எஸ்.கே.பி., பள்ளி, குடிமங்கலம் அரசுப்பள்ளி, மடத்துக்குளம் அரசுப்பள்ளி மற்றும் ஜெ.எஸ்.ஆர்., பள்ளி என, ஆறு மையங்களில் தேர்வு எழுதினர். மாவட்டக்கல்வி அலுவலர் பழனிசாமி, பள்ளித்துணை ஆய்வாளர் கலைமணி ஆகியோர் தேர்வு மையங்களை பார்வையிட்டனர்.தேர்வு மைய அலுவலர்கள் கூறுகையில், 'மொத்தம், 632 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், 577பேர் பங்கேற்றனர்; 55 பேர் 'ஆப்சென்ட்' ஆகி இருந்தனர்,' என்றனர்.- நிருபர் குழு -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE