கேசம்பள்ளி: கிராமங்களில் தங்கி மக்கள் குறை தீர்க்கும் நிகழ்ச்சியில், தங்கவயல் தாசில்தார் சுஜாதா, கேசம்பள்ளி கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட பீல்வார் கிராமத்திற்கு சனிக் கிழமை சென்றார்.
அங்கு பல ஆண்டுகளாக இருந்து வரும் மயான இடத்திற்கு செல்லும் பாதை ஆக்ரமிப்பு, மயான நிலம் ஆக்ரமிப்பு குறித்து, கிராம மக்கள் புகார் அளித்தனர். அதற்கான மனுக்களை பல முறை அளித்தனர்; பல போராட்டங்களை நடத்தியுள்ளனர்.ஆனால், எந்த பிரயோஜனமும் இல்லை என்பதை தேவேந்திர குல வேளாளர் அமைப்பினர் வலியுறுத்தினர். இப்புகாரின் படி, பரிசீலனை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென தாசில்தார் சுஜாதா உறுதி அளித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE