பெங்களூரு : ''பொருளாதார ரீதியில் பின்தங்கிய, ஏழைகளான வீரசைவ, லிங்காயத் பஞ்சமசாலி சமுதாயத்துக்கு, இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும். இதற்கு என் முழுமையான ஆதரவு உள்ளது,'' என, சுரங்கம், நில ஆய்வியல் துறை அமைச்சர் முருகேஷ் நிரானி தெரிவித்தார்.
பெங்களூரில், நேற்று அவர் கூறியதாவது:இதற்கு முன் எடியூரப்பா, முதல்வராக இருந்த போது, இட ஒதுக்கீடு தொடர்பாக, கமிட்டி அமைக்கப்பட்டது.அறிக்கை வரும் முன்பே அரசியல் மாற்றங்கள் நடந்தன. இப்போதும் இட ஒதுக்கீட்டுக்காக, நாங்கள் தாமதிக்கவில்லை. இது தொடர்பாக பரிசீலிக்கப்படுகிறது.பொருளாதார ரீதியில் பின் தங்கிய ஏழைகளான வீரசைவ, லிங்காயத் பஞ்சமசாலி சமுதாயத்துக்கு, இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும். இதற்கு என் முழுமையான ஆதரவு உள்ளது. இட ஒதுக்கீடு கிடைத்தே தீரும். இது குறித்து தீர்மானம் கொண்டு வந்து, மத்திய அரசுக்கு சிபாரிசு செய்யப்படும். எங்கள் மீது நம்பிக்கை வையுங்கள்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE