பொள்ளாச்சி:பொள்ளாச்சி மரப்பேட்டை வீதியை சேர்ந்த வெங்கடேஷ், 21, கடந்த ஆறு மாதத்துக்கு முன் தனியார் ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றினார். தற்போது, பெயின்டிங் வேலைக்கு செல்கிறார். இந்நிலையில், நேற்றுமுன்தினம் குடிபோதையில் வந்த வெங்கடேஷ், அரசு மருத்துவமனை அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில், சித்திக் என்பவரின் ஆட்டோ மீது கால் வைத்து, தீப்பெட்டி கேட்டுள்ளார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.அப்போது, வெங்கடேஷ்க்கு ஆதரவாக ஸ்ரீநாத் பேசியுள்ளார். இருவரும் சேர்ந்து சித்திக்கை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால், கோபமடைந்த சித்திக், ஆட்டோவில் இருந்த கத்தியை எடுத்து வெங்கடேைஷ குத்தனார். படுகாயமடைந்த வெங்கடேஷ், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, சித்திக்கை கைது செய்தனர். சித்திக் கொடுத்த புகாரின் பேரில், வெங்கடேஷ், ஸ்ரீநாத் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE