பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, கூலித்தொழிலாளி தீக்குளித்து இறந்தது குறித்து, மகாலிங்கபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.பொள்ளாச்சி, தொப்பம்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி குமார் என்கிற அருண்குமார், 35. குடிப்பழக்கம் உள்ளதால் அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த, 14ம் தேதி இரவு குடி போதையில் வீட்டுக்கு வந்தவரை, மனைவி செல்வி கண்டித்ததாக கூறப்படுகிறது.இதனால், மனவேதனை அடைந்தவர், உடலில் 'கெரசின்' ஊற்றி தீ வைத்து கொண்டார். அவரின் அலறல் சப்தம் கேட்டு, அருகில் வசிப்பர்கவர்கள் மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில், சிகிச்சைக்கு சேர்த்தனர். நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். மகாலிங்கபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE