அன்னுார்:எல்.ஐ.சி.,யின் புதிய பாலிசியில், போனஸ் கமிஷன் ரத்து செய்யப்பட்டதற்கு, முகவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி., வரும், 22ம் தேதி 'பீமா ஜோதி' எனும் புதிய பாலிசியை அறிமுகப்படுத்துகிறது. முகவர்கள் சங்கம் (லியாபி) சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'புதிய பாலிசியில், முகவர்களுக்கு போனஸ் கமிஷன் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆன்-லைன் முறையில் பாலிசியை பெறுவோருக்கு, 10 சதவீத தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இது, முகவர்களை புறக்கணித்து, ஆன்-லைன் வணிகத்தை ஊக்குவிக்கும் செயல். இதை கண்டிக்கிறோம். எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பாலிசி அறிமுக விழாவில், முகவர்கள் பங்கேற்க மாட்டார்கள்' என, தெரிவித்துள்ளது. இதேபோல், அகில இந்திய எல்.ஐ.சி., முகவர் சங்கமும் (லிகாய்), புதிய பாலிசி துவக்க விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE