பேரூர்:உலகத் தாய்மொழி நாளை முன்னிட்டு, பேரூர் தமிழ் கல்லுாரி சார்பில், நேற்று பேரணி நடந்தது.பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் தலைமை வகித்தார். தஞ்சை தமிழ் பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார்.பேரணியில் பங்கேற்ற மாணவர்கள், தமிழ் மொழியை போற்றும் வகையில், 'எங்கும் தமிழ்; எதிலும் தமிழ்' என்ற கோஷத்தை முழங்கி, துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வினியோகித்தனர்.பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் துவங்கிய பேரணி, தமிழ் கல்லுாரியில் நிறைவடைந்தது. அதில்,தமிழ் ஆர்வலர்கள் நுாற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE