கோவை:பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் பாட்டிக்கு, பாராட்டு விழா மற்றும் 'சிகரம் தொடு-நாளைய நாயகர்கள் விருது, வழங்கும் விழா, கோவை, நேரு நகர் சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், நடந்தது. கல்லுாரி கலையரங்கில் நடந்த விழாவுக்கு, சுகுணா கல்வி நிறுவனங்களின் தலைவர் லட்சுமிநாராயணன் தலைமை வகித்தார்.நிகழ்ச்சியில், பாப்பாம்மாள் பாட்டி பேசுகையில், ''நல்ல உணவு, மனதை எப்போதும் சந்தோஷமாக வைத்து கொள்ள வேண்டும்,'' என்றார். தொடர்ந்து, தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு, நாளைய நாயகர்கள் விருதும், ஆசிரியர்களுக்கு சிறந்த ஆசிரியர் விருதும் வழங்கப்பட்டது.சுகுணா கல்வி நிறுவனங்களின் செயலர் ஸ்ரீகாந்த் கண்ணன், கல்லுாரி முதல்வர் வைத்தியநாதன், தமிழ்த்துறை தலைவர் அன்புசிவா உள்பட பேராசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE