கோவை:கோவை மலுமிச்சம்பட்டி அவ்வை நகரை சேர்ந்தவர் சந்தோஷ், 22; கூலித்தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வசந்த், 22 என்பவருக்கும் ஏற்பட்ட தகராறில், வசந்த் கத்தியால் குத்தப்பட்டார். செட்டிப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று சந்தோஷ், வெரைட்டிஹால் ரோடு பகுதியில் நின்றிருந்தார்.அப்போது அங்கு வந்த வசந்த், அவரது தம்பி குட்டி, அவரது நண்பர் பிரசாந்த் ஆகியோர் சந்தோஷிடம் வாக்குவாதம் செய்தனர். வாக்குவாதம் முற்றிய நிலையில், மூவரும் மறைத்து வைத்திருந்த கத்தியால், சந்தோஷை குத்தினர்.இதில் படுகாயமடைந்த அவர் மயங்கி விழுந்தார். மூவரும் அங்கிருந்து தப்பினர். அப்பகுதியில் இருந்தவர்கள் சந்தோஷை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உக்கடம் போலீசார் வழக்கு பதிந்து, தப்பியோடிய மூவரையும் கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE