கோவை:பப்ஜி கேம் மூலம் பழகிய பெண் வங்கி அதிகாரி, பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த, 24 வயது இளம்பெண், கோவை மத்திய மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகார்:நான் கேரளாவில் உள்ள வங்கியில், உதவி மேலாளராக பணிபுரிகிறேன். பப்ஜி விளையாட்டு மூலம், ஹரீஸ் என்ற வாலிபர் அறிமுகமானார். இதன் பின் எங்களுக்குள் நட்பு ஏற்பட்டது. என்னை வற்புறுத்தி கோவை அழைத்து வந்த ஹரிஸ், விடுதி ஒன்றில் தங்கிய போது, பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டார். அதன் பின், அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.இது குறித்து வழக்கு பதிந்த போலீசார், ஹரீசை தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE