கோவை:கோவை ரயில்வே ஸ்டேஷனில் பயணிகளின் நீண்டகால எதிர்பார்ப்பான 'லிப்ட்', நேற்று பயன்பாட்டுக்கு வந்தது.கோவை ரயில்வே ஸ்டேஷனில் பயணிகள் வசதிக்காக எஸ்கலேட்டர், லிப்ட் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மூன்று மற்றும், நான்காம் நடைமேடையில் 'லிப்ட்' ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள நிலையில், ஒன்று மற்றும் இரண்டாம் நடைமேடையில் அமைக்கப்பட்டு வந்த 'லிப்ட்', பணி முடிந்து நேற்று பயன்பாட்டுக்கு வந்தது.மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் 'வீடியோ கான்பரன்சிங்' வாயிலாக, தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் முன்னிலையில், 'லிப்ட்' பயன்பாட்டை துவக்கி வைத்தார். கோவை ரயில்வே ஸ்டேஷன் இயக்குனர் ராகேஷ்குமார் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE