கோவை:கோவையில் பொக்லைன் மற்றும் எர்த் மூவர் வாகன உரிமையாளர்களின், மூன்று நாள் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது.பெட்ரோல், டீசல் விலை, சாலை வரி உயர்வு காரணமாகபொக்லைன், எர்த்மூவர் வாகனங்களை வாடகை குறைவாக இயக்குவதில், பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டன. சாலை வரி, எரிபொருள் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி, கடந்த 19ம் தேதியிலிருந்து, நேற்று வரை அதன் உரிமையாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். நேற்று ஸ்டிரைக் முடிவுக்கு வந்தது. மாவட்ட எர்த்மூவர் உரிமையாளர் சங்க நிர்வாகிகள்மாணிக்கம், அறிவரசு உள்ளிட்ட நிர்வாகிகள் கூறுகையில், 'பெட்ரோல், டீசல் விலை குறைப்புக்கு, மாநில மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், சாலை வரியையும் குறைக்க வேண்டும்,'' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE