அன்னூர்:அவுட்டுக்காய் வைத்து காட்டுப் பன்றியைக் கொன்ற இருவர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.அம்மா செட்டிபுதூரை சேர்ந்தவர் ராமசாமி, 38. அதே ஊரை சேர்ந்தவர் காளியப்பன், 50. இருவரும் மரம் வெட்டும் தொழிலாளிகள். நேற்று முன்தினம் பட்டக்காரன்புதூர், பொது சுடுகாடு அருகே, கணக்கன் குட்டையில் அவுட்டு காய் பயன்படுத்தி, ஏழு கிலோ எடையுள்ள காட்டுப் பன்றியைக் கொன்றுள்ளனர். பின்னர், அந்த காட்டுப்பன்றியை தீயில் கருக்கி உள்ளனர். சிறுமுகை வனச்சரகர் கணேசன் புகாரின்படி, அன்னூர் போலீசார் இருவர் மீதும், வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE