கோவை:தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வுக்கு, மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில், தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வு நேற்று நடந்தது. இதில், எட்டாம் வகுப்பு படிக்கும் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் மட்டுமே பங்கேற்பர்.கோவை மாவட்டத்தில், இத்தேர்வுக்கு 51 பள்ளிகளில் மையங்கள் அமைக்கப்பட்டன. உரிய சமூக இடைவெளி பின்பற்றி, இருக்கைகள் போடப்பட்டதோடு, கிருமி நாசினி தெளித்து, மாணவர்கள் தேர்வெழுத தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.மனத்திறன் தேர்வு, படிப்பறிவு தேர்வு என இரு பிரிவுகளாக நடந்த இத்தேர்வில் பங்கேற்க, 5 ஆயிரத்து 387 பேர் விண்ணப்பித்தனர். இவர்களில், 4 ஆயிரத்து 930 பேர் தேர்வில் பங்கேற்றனர். 457 பேர் தேர்வெழுத வரவில்லை.எட்டாம் வகுப்பு வரை, பள்ளிகள் திறக்கப்படாத இச்சமயத்தில், மாணவர்கள் தேர்வெழுத ஆர்வமுடன் வந்தனர். இதில் வெற்றி பெறுவோருக்கு, ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் வீதம், பிளஸ் 2 முடிக்கும் வரை, கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE