நியூயார்க்: வடக்கு ஆப்ரிக்க நாடான லிபியா, சர்வாதிகாரி கடாபியின் வீழ்ச்சிக்குப் பின், 2011ல், இரண்டாக பிரிந்தது. மேற்கு பகுதியில் உள்ள அரசை, ஐ.நா., அங்கீகரித்தது. கிழக்கு பகுதியில் உள்ள, காலிபா ஹிப்டர் தலைமையிலான பயங்கரவாத அமைப்பின் நிர்வாகத்தை ஏற்கவில்லை. இந்நிலையில், கிழக்கு பகுதியில் உள்ள நிர்வாகத்துக்கு, சில நாடுகள் ஆதரவு அளித்தன. இதையடுத்து, பொருளாதார மற்றும் ஆயுத விற்பனை தடை விதித்தது, ஐக்கிய நாடுகள் சபை.ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், லிபியாவின் கிழக்கே உள்ள பயங்கரவாத அமைப்பு நிர்வாகத்துக்கு, அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்புடன் நெருக்கமானவரான, அமெரிக்க ஆயுத கான்ட்ராக்டர், எரிக் பிரின்ஸ், ஆயுதங்கள் சப்ளை செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஐக்கிய அரபு எமிரேட்சை சேர்ந்த, மூன்று நிறுவனங்களும் ஆயுதங்கள் சப்ளை செய்துள்ளதாக, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE