ராமநாதபுரம்: மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்து 5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க கேட்டு அனைத்து மாவட்டங்களிலும் பிப்.26ல் சலுான் கடைகளை அடைத்து உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் கொத்தடிமையில் இருந்து விடுபட சட்ட பாதுகாப்பு வலியுறுத்தியும், உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மருத்துவர் சமூகநலச்சங்கம் முடி திருத்தும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பில் பிப்.26ல் ஒரு நாள் கடையடைப்பு மற்றும் மாவட்ட தலை நகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது, என ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE