பல்லடம் நகர அ.தி.மு.க., நிர்வாகிகள் சிலர், ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தனர். திருப்பூர் புறநகர் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் கிருஷ்ணகுமார், நகராட்சி 8வது வார்டு செயலாளர் பாலகுமார், 17வது கிளை கழக செயலாளர் செந்தில்குமார் உட்பட சிலர், அ.தி.மு.க.,வில் இருந்து விலகி தி.மு.க.,வில் இணைந்தனர். இவர்கள் ஏற்கனவே தி.மு.க.,வில் இருந்து அ.தி.மு.க.,வில் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று திருப்பூர் வந்த தி.மு.க., தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் மூவரும் இணைந்தனர். வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பத்மநாபன், பல்லடம் நகர செயலாளர் ராஜேந்திரகுமார் ஆகியோர் தலைமையில் இணைப்பு நிகழ்ச்சி நடந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE