பல்லடம்:பல்லடம் -- மங்கலம் ரோட்டில், அரசு கல்லுாரி செயல்பட்டு வருகிறது.2017 --18ம் ஆண்டு திறக்கப்பட்டு, கடந்த ஆண்டு முதல் புதிய கட்டடத்தில் கல்லுாரி இயங்கி வருகிறது. 2017ல் துவக்கப்பட்ட ஏழு அரசு கல்லுாரிகள், 'எம்.ஜி.ஆர்., அரசு கலை அறிவியல் கல்லுாரி என்று பெயரிடப்பட்டுள்ளது.பல்லடம் அரசு கல்லுாரிக்கு, 'புரட்சி தலைவி அம்மா அரசு கலை அறிவியல் கல்லுாரி' என பெயர் மாற்றம் செய்ய கடந்த சில தினங்களுக்கு முன் அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி, கல்லுாரியின் பெயர் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE