அனுப்பர்பாளையம்:திருப்பூரில், வீட்டில் கேஸ் கசிந்து தீப்பற்றியதில், ஐந்து பேர் படுகாயமடைந்தனர்.திருப்பூர், பி.என்., ரோடு அம்மன் நகரை சேர்ந்தவர் சரவணன், 42; பனியன் தொழிலாளி. நேற்று மாலை 6:00 மணிக்கு, வீட்டில் சமையல் செய்ய கேஸ் அடுப்பை பற்ற வைத்துள்ளார். கேஸ் கசிந்து அறை முழுதும் பரவி இருந்துள்ளது. பற்ற வைத்ததும், அவர் மீது தீ பற்றியது.அலறல் சத்தம் கேட்டு, வீட்டின் அருகில் இருந்த சரவணனின் மனைவியின் சகோதரி விஜயா, 38, உள்ளே ஓடிச் சென்றுள்ளார். அவர் மீதும் தீப்பிடித்தது.தொடர்ந்து, விஜயாவின் மகன் அஸ்வின், 19, மகள் தரணிகா, 19, பக்கத்து வீட்டில் வசிக்கும் கோகிலா, 39, ஆகியோர், தீப்பற்றி கொண்டவர்களை காப்பாற்ற வீட்டுக்குள் சென்றனர். அவர்கள் மீதும் தீப்பற்றி உள்ளது. அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஐவரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.அஸ்வின் தவிர மற்ற நான்கு பேருக்கும் தீக்காயம் கடுமையாக உள்ளது. சரவணனின் மனைவி மற்றும் குழந்தைகள் கடைக்கு சென்றதால், கேஸ் விபத்தில் இருந்து தப்பினர். திருமுருகன்பூண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE