திருப்பூர்:திருப்பூர் புது பஸ் ஸ்டாண்ட் பகுதியை சேர்ந்தவர் ஜேம்ஸ், 32; கட்டட தொழிலாளி. பூலுவபட்டி, செட்டிபாளையத்தை சேர்ந்தவர் முகமது ரியாஸ்; டிரைவர்.இவருக்குமிடையே கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த, 18 ம் தேதி ஜேம்ஸ் தனது நண்பர்களை அழைத்து கொண்டு, முகமது ரியாஸ் வீட்டுக்கு சென்றார்.அவர் வீட்டில் இல்லை. கோபத்தில் இருந்த ஜேம்ஸ், முகமது ரியாசின் தந்தை முகமது முஸ்தபாவை அரிவாளால் வெட்டினர். தடுக்க வந்த மனைவி சகிதா பானுவையும் வெட்டி விட்டு தப்பி சென்றனர்.கொலை முயற்சி சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலை பிடிக்க இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. அதில், தஞ்சாவூர் மாவட்டத்தில் பதுங்கியிருந்த, பட்டுகோட்டையை சேர்ந்த வினோத், 23, கார்த்தி, 24, சரவணகுமார், 18 மற்றும் செல்வகுமார், 24 ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.தலைமறைவாக உள்ள ஜேம்சை போலீசார் தேடி வருகின்றனர். அவர் மீது, தஞ்சாவூர், பட்டுகோட்டையில், 14 வழக்குகள் உள்ளது.மற்ற நான்கு பேர் மீது பல வழக்குகள் இருப்பது தெரிய வந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE