விருதுநகரில் நடந்த, பா.ஜ., பூத் கமிட்டி மாநாடு மற்றும் தாமரை எழுச்சி விழாவில், அக் கட்சியின் மாநில பொதுச் செயலர் சீனிவாசன் பங்கேற்றார்.அவர் பேசுகையில், 'பிரதமர் மோடி, கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாதது ஏன் என கேட்கின்றனர். 1970ல், முதல்வராக இருந்த கருணாநிதி, குடும்ப கட்டுப்பாடு திட்டம் கொண்டு வந்தார்.
அப்போது அவர், ஏன் குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்ளவில்லை... அப்படி செய்திருந்தால், இத்தனை வாரிசுகள் வந்திருக்க மாட்டர்' என்றார்.அங்கிருந்த மூத்த நிருபர் ஒருவர், 'எதையும் எதையும் முடிச்சு போடுறார் பா... இப்படி பேசி, கிடைக்கும் கொஞ்சம் ஓட்டையும் இழந்திடுவாங்க போலிருக்கிறதே... தேர்தல் வந்தால் போதும், பழைய கதையெல்லாம் சந்திக்கு வருது...' என, சலித்துக்கொண்டார். சுற்றியிருந்தோர் ஆமாம் என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE