கலசப்பாக்கம்: நிலத்தகராறில் டெய்லர் வெட்டி கொலை செய்யப்பட்டார். அ.தி.மு.க., பிரமுகர் உட்பட, மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த சிறுகிளாம்பாடியைச் சேர்ந்தவர், துரைகண்ணு, 44; டெய்லர். இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த, அ.தி.மு.க., கிளை செயலர் துரை, 46, என்பவருக்கும் நிலம் வாங்குவது தொடர்பாக முன்விரோதம் இருந்தது.நேற்று முன்தினம் இரவு, அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த துரை, அவரது மனைவி தீபா, 41 துரையின் தந்தை முனுசாமி, 63, ஆகியோர், துரைகண்ணுவை உருட்டு கட்டையால் தாக்கி, கத்தியால் வெட்டினர்.இதில், படுகாயமடைந்த அவர், திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, உயிரிழந்தார். கலசப்பாக்கம் போலீசார், துரை, தீபா மற்றும் முனுசாமி ஆகியோரை கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE