யாங்கூன்: நம் அண்டை நாடான மியான்மரில், ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், கைது செய்யப்பட்ட தலைவர்களை விடுவிக்க வலியுறுத்தியும், மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.தலைநகர் நேபிடாவில், சமீபத்தில் நடந்த போராட்டத்தின்போது, போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், மியா திவெட் திவெட் கைன் என்ற இளம்பெண் உயிரிழந்தார்.இந்நிலையில், மாண்டலே மாவட்டத்தில், போராட்டக்காரர்கள் மீது, போலீசார் நேற்று முன்தினம் இரவு மீண்டும் தாக்குதல் நடத்தினர். அதில், மேலும், இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர்.இதையடுத்து, போலீசாரின் அடக்குமுறைக்கு எதிராக, போராட்டக்காரர்கள், நாடு முழுதும் நேற்று போராட்டம் நடத்தினர். பல இடங்களில், உயிரிழந்தோருக்காக அஞ்சலி செலுத்தப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE