திருவண்ணாமலை: தவறான சிகிச்சையால், தொழிலாளி உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம், தானிப்பாடியை சேர்ந்தவர் சம்பத், 42 கூலித்தொழிலாளி; இவர், கடந்த வாரம் உடல்நிலை பாதிக்கப்பட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, டாக்டர்கள் சரியாக சிகிச்சை அளிக்கவில்லை எனக்கூறி, திருவண்ணாமலை துர்க்கையம்மன் கோவில் தெருவில், உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த, 17ல் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
அவருக்கு, தலையில் ரத்தக்கசிவு உள்ளதால், அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என டாக்டர்கள் கூறினர். இதையடுத்து அவருக்கு கடந்த, 18ல், அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கோமா நிலைக்கு சென்ற அவர், சுய நினைவு திரும்பாமல் நேற்று உயிரிழந்தார். இதனால், அவரது உறவினர்கள், தவறான சிகிச்சை அளித்ததால் தான் உயிரிழந்ததாக கூறி, நேற்று மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.மருத்துவனை நிர்வாகம் உரிய இழப்பீடு வழங்குவதாக கூறியதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE