விழுப்புரம்,: ''இரண்டு மாதத்தில் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்து, மக்கள் குறைகள் தீர்க்கப்படும்,'' என தி.மு.க., துணைப் பொதுச் செயலர் பொன்முடி கூறினார்.விழுப்புரத்தில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா, மார்ச், 1ம் தேதி நடக்கிறது. அன்று விழுப்புரம் மத்திய மாவட்டத்தில், தி.மு.க., இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் சைக்கிள் பேரணி நடக்கிறது. இன்று காலை, 10:00 மணிக்கு பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் விலை உயர்வை கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடக்கிறது.மக்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகள் பற்றி கவலையில்லாத ஆட்சி முடிய போகிறது. இரண்டு மாதத்தில் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்து, மக்கள் குறைகள் தீர்க்கப்படும்.விழுப்புரம் குளத்தில் உள்ள குப்பையை அள்ளுவதற்கு, 1.50 கோடி செலவு செய்கின்றனர். முதல்வராக இருந்தபோது, ஊழலுக்காக சிறை சென்ற ஜெ., பெயரை, குளத்திற்கு வைத்துள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE