திருப்பூர்: கோவையில் இருந்து புறப்படும், நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், ஐந்து நாட்கள், மதுரை வரை மட்டும் இயக்கப்படும்.ரயில் தண்டவாளம், சிக்னல் பராமரிப்பு பணி காரணமாக, கோவையில் இருந்து, காலை 8:00 மற்றும் இரவு 7:30க்கு புறப்படும் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், பிப்.24 முதல் 28ம் தேதி வரை, ஐந்து நாட்கள், மதுரை வரை மட்டும் இயக்கப்பட உள்ளது; திருப்பரங்குன்றம், விருதுநகர், கோவில்பட்டி, வாஞ்சிமணியாச்சி, திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோவில் செல்லாது.மறுமார்க்கமாக, நாகர்கோவிலுக்கு பதில், மதுரையில் இருந்து, 26 முதல் 28ம் தேதி வரை, மூன்று நாட்கள், கோவைக்கு இயக்கப்படும்.இத்தகவலை, சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE