சிவகாசி: அரசிலுக்கு வரும் எண்ணம் இல்லை'' என தமிழக முன்னாள் தலைமை செயலர் ராம மோகனராவ் கூறினார்.விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் வடுகர் என்ற கம்மவார் மகாஜன சங்கத்தின், 52வது ஆண்டு விழாவில் அவர் பேசியதாவது:அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை. அரசியலில் தெலுங்கு மக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அரசு பணி ஓய்வுக்கு பின் தெலுங்கு சமுதாய மக்களுக்கு முடிந்த உதவி செய்ய வேண்டும் என எனது பெயரில் பாசறை துவக்கினேன். தெலுங்கு சமுதாய மக்களை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து அரசியலிலும், அரசு பதவிகளிலும் சாதிக்க தேவையான பணிகளை செய்வேன்.இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE