பரமக்குடி : பரமக்குடி - நயினார் கோவில் ரோட்டோரங்களில் உருவாகியுள்ள பள்ளங்களால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
பரமக்குடியில் இருந்து ராமநாதபுரம் செல்லும் நயினார்கோவில் ரோடு உள்ளது. எமனேஸ்வரம் துவங்கி, கரைமேல் குடியிருப்பு, நயினார்கோவில், பாண்டியூர் ரோட்டோரத்தில் மழையால் ஆங்காங்கே பள்ளங்கள் உருவாகியுள்ளன.நெல் மற்றும் சிறு தானியங்கள் அறுவடை செய்யப்பட்டு ரோடுகளில் உலர்த்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் ரோட்டோர பள்ளங்களில் வைக்கோல் பரவிக் கிடக்கிறது.எதிரெதிர் செல்லும் வாகனங்களால் ரோட்டை விட்டு ஒதுங்கும் போது, வாகனங்கள் பள்ளங்களில் சிக்கி விபத்துக்குள்ளாகும் அபாயம் நீடிக்கிறது. மேலும் கால்வாய் மற்றும் வயல் ஓரங்களில் மழைநீரின் போக்குக்கு ஏற்ப இது போன்ற பள்ளங்கள் அதிக அளவில் உருவாகியுள்ளது.
வாகனங்கள் விபத்துக்கு உள்ளாவதை தடுக்கும் நோக்கில் ரோட்டோர பள்ளங்களை மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE