மும்பை: மும்பை நட்சத்திர ஓட்டலில் சுயேட்சை எம்.பி.ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
யூனியன் பிரதேசமான தாத்ரா - நாகர் ஹவேலி தொகுதி லோக்சபா சுயேட்சை எம்.பி. மோகன் தோல்கர் 59, இன்று மும்பை மெரின் டிரைவில் உள்ள நட்சத்திர ஓட்டல் அறையில் சடலமாக மீட்கப்பட்டார். தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
விசாரணை தீவிரம்
தகவறிந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரசேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து முதற்கட்ட விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். அவருடன் தங்கியவர்கள் யார் குறித்த விவரம் குறித்தும் விசாரிக்கின்றனர்.
![]()
|
7 முறை எம்.பி.,
மோகன் தோல்கர், இதற்கு முன் காங். கட்சியிலிருந்தார். தாத்ரா - நாகர் ஹவேலி யூனியன் பிரதேச காங். தலைவராகவும், 7 முறை லோக்சபா எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2019-ம் ஆண்டு காங்.கிலிருந்து விலகி அப்போது நடந்த லோக்சபா தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு எம்.பி.யானார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE