சென்னை: ரேஷன் கடை பணியாளர்களுக்கு தொகுப்பூதியம் உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அரசாணையில் தெரிவித்துள்ளதாவது: ரேஷன் கடைகளில் புதிதாக பணியமர்த்தப்படும் பணியாளர்களுக்கு ஓராண்டுக்கு வழங்கப்படும் தொகுப்பூதியம் உயர்த்தப்பட்டுள்ளது.

கட்டுனர்களுக்கு தொகுப்பூதியம் ரூ.5,500 ஆக உயர்வு
அதன்படி, கட்டுனர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.4,250 லிருந்து ரூ.5,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.ஓராண்டு பணி முடித்த கட்டுனர்களுக்கு காலமுறை ஊதியமாக ரூ.7,800-ரூ.26000 வழங்கப்படும்.
விற்பனையாளர்களுக்கு தொகுப்பூதியம் ரூ.6,250 ஆக உயர்வு
விற்பனையாளர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.5000 லிருந்து ரூ.6,250 ஆக உயர்த்தப்படுகிறது.இந்நிலையில் ஓராண்டு பணி முடித்த விற்பனையாளர்களுக்கு காலமுறை ஊதியமாக ரூ.8,600-ரூ.29000 வழங்கப்படும். இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE