வால்பாறை:வால்பாறையில், குண்டும் குழியுமாக உள்ள ரோட்டை சீரமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வால்பாறை நகரிலிருந்து, சோலையாறு, முடீஸ் செல்லும் ரோட்டில், ஒரு கி.மீ., தொலைவுக்கு நகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. கரடு முரடாக இருந்த ரோடு, 13 ஆண்டுகளுக்கு முன் நகராட்சி சார்பில் சீரமைக்கப்பட்டு, கான்கிரீட் ரோடாக மாற்றப்பட்டது.இந்நிலையில், இந்த ரோட்டில் பல்வேறு இடங்களில் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால், இந்த வழித்தடத்தில் வாகனங்கள் செல்ல முடியாமல் தடுமாறுகின்றன. குறிப்பாக, இருசக்கர வாகனங்கள் வேகமாக செல்லும் போது விபத்து ஏற்படுகிறது. இந்த ரோட்டை நகராட்சி சார்பில் சீரமைக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE