கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, வேலாயுதம்பாளையத்தில் கட்டப்பட்ட மகளிர் சுய உதவிக்குழு கட்டடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.கிணத்துக்கடவு, தேவராயபுரம் ஊராட்சிக்குட்பட்ட வேலாயுதம்பாளையத்தில், 11 ஆண்டுகளுக்கு முன் மகளிர் சுய உதவிக்குழு கட்டடம் கட்டப்பட்டது. இதில், மகளிர் சுய உதவிக்குழுவினர் சுய தொழில்களை செய்து வந்தனர்.அதன்பின், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சரிவர உதவித்தொகை வழங்காததால், சுய தொழில்கள் நிறுத்தப்பட்டன. கடந்த ஆறு ஆண்டுகளாக கட்டடம் பயன்பாடு இன்றி பூட்டியே வைக்கப்பட்டுள்ளது.இந்த கட்டடத்தை சுற்றிலும் புதர்கள் வளர்ந்துள்ளது. கட்டடம் பயன்பாடின்றி இருப்பதால், பழுதடையும் வாய்ப்புள்ளது. இந்த கட்டடத்தை மீண்டும் பயன்படுத்தும் வகையில், சுற்றிலும் வளர்ந்துள்ள புதர்களை அகற்ற வேண்டும்.கட்டடத்தின் உட்புற பகுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு, ஊராட்சியில் உள்ள குழாய், லைட்டுகள் போட்டு வைப்பதற்கான குடோனாக பயன்படுத்தலாம்.இதனால், கட்டடத்தை தேவராயபுரம் ஊராட்சி நிர்வாகத்தினர் பராமரித்து பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.இதேபோல், கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 34 ஊராட்சிகளிலும் உள்ள மகளிர் சுய உதவிக்குழு கட்டடத்தை பராமரிப்பு செய்து, ஊராட்சி வசம் ஒப்படைத்தால் குடோனாக பயன்படுத்தலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE