பொள்ளாச்சி:பொள்ளாச்சி - பல்லடம் வரையிலான, நான்கு வழிச்சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, பா.ஜ., வலியுறுத்தியுள்ளது.பொள்ளாச்சி வடக்கு - கிழக்கு ஒன்றிய, பா.ஜ., நிர்வாகிகள் கூட்டம் நெகமம் பா.ஜ., அலுவலகத்தில் நடந்தது. ஒன்றிய தலைவர் மாணிக்கம் கூட்டத்துக்கு தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் சிவகுமார் முன்னிலை வகித்தனர். ஒன்றிய பொது செயாலாளர் ராமசாமி வரவேற்றார்.கூட்டத்தில், பொள்ளாச்சி - பல்லடம் வரையிலான, நான்கு வழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும், மத்திய அரசின் ஜல் சக்தி யோஜனா திட்டத்தின் கீழ், குடிநீர் வசதியை மாநில அரசு துரிதமாக செயல்படுத்த வேண்டும், என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE