பொள்ளாச்சி:பொள்ளாச்சி கிராமங்களில், பயணிகள் நிழற்கூரைகள், 'குடி'மகன்கள் கூடாரமாக மாறி வருவதால், பயணிகள் அவதிப்படுகின்றனர்.பொள்ளாச்சி கிராமப்பகுதிகளில், அமைந்துள்ள பஸ் ஸ்டாப்களில், பொதுமக்கள் நலனுக்காக நிழற்கூரைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிழற்கூரைகளில், இரவு நேரங்களில் 'குடி'மகன்கள் அமர்ந்து மது அருந்தும் இடமாக மாற்றியுள்ளனர்.போதையில், மது பாட்டில்கள், வாட்டர் பாக்கெட்டுகள், நொறுக்குத் தீனி கவர்களை நிழற்கூரைக்குள்ளேயே போட்டுச் செல்கின்றனர்.இதனால், பகலில் வரும் மக்கள், மாணவர்கள் நிழற்கூரைக்குள் நுழையவே தயங்குகின்றனர். வெயிலில் காத்திருந்து பஸ் ஏறுகின்றனர். இது போன்ற நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க, அந்தந்த பகுதி பேலீசார், இரவு நேரங்களில் ரோந்து சென்று கண்காணிக்க வேண்டும்.அதேபோன்று, பொது இடங்களில் மது அருந்துவோர் மீதும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE