பொள்ளாச்சி;பொள்ளாச்சி காமாட்சி அம்மன் கோவிலில், அஷ்டபந்தன மகா கும்பாபிேஷக விழா நேற்று நடந்தது. ஓம் சக்தி, பராசக்தி என பக்தர்கள் கோஷம் முழக்க, கோபுர கலசத்துக்கு புனித நீர் ஊற்றப்பட்டது.பொள்ளாச்சி பாலமாணிக்கம் வீதி காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிேஷக விழா, கடந்த 19ம் தேதி காலை, 7:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து, புண்ணியாகவாசனம், பஞ்சகவ்ய பூஜை, கணபதி ேஹாமம், நவக்கிரக ேஹாமம், லட்சுமி ேஹாம பூஜைகளும்; வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.கடந்த இரண்டு நாட்களாக மூன்று கால யாக பூஜை; பூர்ணாஹுதி, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.நேற்று காலை, 7:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, காலை, 8:30 மணிக்கு யாத்ரதானம், கலசங்கள் புறப்படுதல்; காலை,9:00 மணிக்கு மகா கும்பாபிேஷகம், நடந்தது. ஓம் சக்தி, பராசக்தி என பக்தர்கள் கோஷம் முழங்க, கோபுர கலசத்துக்கு புனித நீர் ஊற்றப்பட்டது.அதன்பின், பரிவார கோபுரங்கள் கும்பாபிேஷக விழா நடந்தது. தொடர்ந்து காலை, 9:15 மணிக்கு காமாட்சி அம்மனுக்கு கும்பாபிேஷகம், அன்னதானம், மகா அபிேஷக வழிபாடு நடந்தது. மாலை, 4:00 மணிக்கு திருக்கல்யாண உற்வசம், இரவு, 7:00 மணிக்கு அம்மன் திருவீதி உலா, ஊஞ்சல் உற்சவம் நடந்தது.கும்பாபிேஷக வைபவத்தை, பொள்ளாச்சி காமாட்சி அம்மன் கோவில் நல்லசாமி சிவாச்சாரியார், திருநள்ளார் ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில் பரம்பரை பூஜாஸ்தானிகர் ராஜசுவாமிநாத சிவாச்சாரியார், பொள்ளாச்சி காமாட்சி அம்மன் கோவில் அர்ச்சகர் சிவாநந்த சிவாச்சாரியார் ஆகியோர் நடத்தினர்.துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அமைச்சர் ராதாகிருஷ்ணன், ம.நீ.மை., மாநில துணை தலைவர் மகேந்திரன் மற்றும் கோவில் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE