உடுமலை:உடுமலை நகரில், ஆக்கிரமிப்புகளால், போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ள ரோட்டில், ஆக்கிரமிப்புகளை, நாளை, அகற்ற, நெடுஞ்சாலைத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.உடுமலை நகரில், நகராட்சி, நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டிலுள்ள ரோடுகளில், ஆக்கிரமிப்புகளால், போக்குவரத்து நெரிசல் நிரந்தரமாக உள்ளது. ரோடு விரிவாக்க பணிகளை மேற்கொண்டாலும், குறுகிய நாட்களில், மீண்டும் தற்காலிக மற்றும் நிரந்தர ஆக்கிரமிப்புகளை ஏற்படுத்துகின்றனர்.இதில், பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து, ரயில்வே ஸ்டேஷன் வழியாக செல்லும் ராஜேந்திரா ரோட்டில், தற்காலிக ஆக்கிரமிப்புகளால், பல்வேறு பாதிப்புகள் தொடர்கதையாக உள்ளது.காலை, மாலை நேரங்களில், போக்குவரத்து ஸ்தம்பித்து, விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி, நெரிசலை தவிர்க்க நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி நிர்வாகத்துக்கு, வாகன ஓட்டிகள் தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர்.நெடுஞ்சாலைத்துறையினர் கூறுகையில், 'உடுமலை பஸ் ஸ்டாண்டிலிருந்து துவங்கும் ராஜேந்திரா ரோட்டில், இருபுறங்களிலும் நகராட்சியுடன் இணைந்து, நாளை (24ம் தேதி) ஆக்கிரமிப்பு அகற்றப்பட உள்ளது. ஆக்கிரமிப்பாளர்கள் தாங்களாகவே, நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்திலுள்ள, பொருட்களை அகற்றி கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், நாளை, பொருட்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும்,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE