உடுமலை:உடுமலை பகுதியிலுள்ள ஐந்து கிராமங்களை, 'உன்னத் பாரத் அபியான்' திட்டத்தில் ஜி.வி.ஜி., கல்லுாரி தத்தெடுத்துள்ளது.உடுமலை ஜி.வி.ஜி., விசாலாட்சி கல்லுாரி, இந்த கல்வியாண்டு முதல் 'உன்னத் பாரத் அபியான்' திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.இத்திட்டத்தின் கீழ், திருப்பூர் மாவட்டத்திலுள்ள வாளவாடி, தின்னபட்டி, கொடிங்கியம், ஜிலோப்பநாயக்கன்பாளையம், தீபாலபட்டி ஆகிய கிராமங்களை தத்தெடுத்துள்ளது.இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, இக்கிராமங்களை ஆய்வு செய்வதற்காக, மூன்றாமாண்டு பயிலும் 55 மாணவியரும், ஏழு பேராசிரியர்களும் தரவுகளை சேகரித்தனர்.திட்டம் சிறந்த முறையில் நடைபெற அனைத்து உதவிகளையும், கல்லுாரி செயலாளர் சுமதி கிருஷ்ணபிரசாத், முதல்வர் ராஜேஸ்வரியும் செய்திருந்தனர்.இப்பணியில், அவ்வூரைச்சேர்ந்த ஊராட்சித்தலைவர்கள், உதவியாளர்கள், பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கினர்.இத்தகவலை கல்லுாரி முதல்வர் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE