பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், ஒவ்வொரு ஓட்டுச்சாவடி மைய அளவிலும், இன்றும், நாளையும் சிறப்பு பயிற்சி முகாம்கள் நடக்கிறது.பொள்ளாச்சி கந்த மகாலில், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் நேற்று நடந்தது.சப்- - கலெக்டர் வைத்திநாதன் பேசியதாவது:இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த, ஜன., மாதம் வெளியிடப்பட்டது. பொள்ளாச்சி தொகுதியில் மட்டும், 5,545 வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர். 100 சதவீதம் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்பட வேண்டும்.பெயர் நீக்கம் செய்வதோடு, புதிய வாக்காளர்கள் சேர்க்கைக்கும் ஆர்வம் காட்ட வேண்டும். 18 வயது நிரம்பிய மற்றும் விடுபட்ட வாக்காளர்கள் அனைவரையும் சேர்க்க வேண்டும். வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம் செய்ய விண்ணப்பங்களை வழங்கலாம்.ஒவ்வொரு ஒட்டுச்சாவடி அளவிலும், இன்று மற்றும் நாளையும் (23, 24ம் தேதி) சிறப்பு முகாம்கள் நடத்தப்பட வேண்டும். விண்ணப்பங்கள் பெற்று சரிபார்க்க வேண்டும். 100 சதவீத வாக்காளர்கள், ஓட்டு அளிக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.தாசில்தார்கள் தணிகைவேல், வெங்கடாச்சலம், ஸ்ரீதேவி, தேர்தல் பிரிவு துணை தாசில்தார்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE