பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், மூதாட்டிகளிடம் நகை பறிப்பு மற்றும் வீடு புகுந்து நகை திருட்டு குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
பொள்ளாச்சி, பாலக்காடு ரோடு குடியிருப்பு பகுதியை சேர்ந்த பழனியப்பன் மனைவி சீதா, 67. இவர், நேற்று முன்தினம் காமாட்சி அம்மன் கோவிலில் இருந்து, வீட்டுக்கு நடந்து சென்றனர். அப்போது, பைக்கில் ெஹல்மெட் அணிந்து வந்த மர்மநபர்கள், மூதாட்டியின் கழுத்தில் இருந்த ஐந்து பவுன் தாலி செயினை பறித்துச் சென்றனர்.பொள்ளாச்சி, ஜோதிநகரை சேர்ந்த சக்திவேல் மனைவி பார்வதி,70. இவர் நேற்று காலை காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிேஷக விழாவுக்கு சென்றார்.
கூட்டத்தில், மூதாட்டியின் கழுத்தில் இருந்த, ஆறு பவுன் செயின் பறிக்கப்பட்டது.அதேபோன்று, ராசக்காபாளையம் சதிஷ்குமார்,34. வெளியூர் சென்று நேற்றுமுன்தினம் நள்ளிரவு வீட்டுக்கு திரும்பினார். வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த, எட்டு பவுன், 15 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.இச்சம்பவங்கள் குறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE